வரும் நவம்பர் 7 குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா அவர்களுடைய நூற்றாண்டு தொடங்குகிறது. அதைக் கொண்டாடும்வகையில் ‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ இணைப்பிதழில் ஒரு பக்கம் முழுக்க அவருடைய கதை, பாடல்கள், அவரைப்பற்றிய பேட்டிகளை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் அழ. வள்ளியப்பா அவர்களுடைய மகள் எழுத்தாளர் தேவி நாச்சியப்பன் ஒரு சுவையான விஷயம் சொல்கிறார்.
அழ. வள்ளியப்பா தன்னைப் பார்க்க வரும் குழந்தைகளிடம் தன்னுடைய படைப்புகளைத் தந்து படிக்கச் சொல்வாராம், அதில் ஏதாவது பிழைகளைக் கண்டுபிடித்தால் ஒவ்வொரு பிழைக்கும் பத்துப் பைசா பரிசு தருவதாகச் சொல்வாராம்.
அன்றைக்குப் பத்துப் பைசா என்பது பெரிய விஷயம். அதனால் குழந்தைகள் ஆர்வத்துடன் பிழைகளைத் தேடுவார்களாம். ஆனால், அழ. வள்ளியப்பா எழுத்தில் பிழைகள் இருக்காது என்பதால், அவர்களுக்கு அந்தப் பத்துப் பைசா எட்டாக் கனிதான். எனினும், அழ. வள்ளியப்பா அவர்களுடைய இந்த விளையாட்டால் நாங்கள் எல்லாரும் தமிழைப் பிழையின்றி எழுதக் கற்றுக்கொண்டோம் என்கிறார் தேவி நாச்சியப்பன்.
***
அழ. வள்ளியப்பா அவர்களுடைய 30க்கும் மேற்பட்ட நூல்களை இலவசமாகப் படிக்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.
***
Keywords: Writing, Writers, Authors, Editing, Grammar, Errors, Error, Mistakes, Mistake, Corrections, Correction, Editors, Editor, Author, Writer