புகழ் பெற்ற எழுத்தாளர் சமஸ் தொடங்கியிருக்கும் “அருஞ்சொல்” தளம் செய்திகளின் அடிப்படையில் கருத்துகளை விவாதிக்கும் தளமாகத் தொடங்கப்பட்டிருக்கிறது. அதுபற்றிச் சமஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு விஷயம் நம் கவனத்தை ஈர்க்கிறது:
பல்வேறு தரப்பினருக்கும் மொழி சார்ந்து அயல்பணி முறையில் பிரதியை செப்பனிட்டுத் தரும் ‘அருஞ்சொல் எடிட்’
தமிழில் எடிட்டிங் எனப்படும் மொழிச் செப்பனிடுதலுக்குத் தேவையான முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்பதுதான் உண்மை. அதனால் தமிழில் பிழை மலிந்த எழுத்துகளும் நிறைந்திருக்கின்றன. இந்நிலையில் சமஸ் போன்ற எழுத்தாளர்கள் இதற்கு முக்கியத்துவம் தந்து தனிச் சேவை ஒன்றைத் தொடங்குவது இந்த முக்கியப் பணிக்குப் பெரும் ஆதரவாக இருக்கும், பிழை இல்லாத நல்ல எழுத்துக்கு வரவேற்பைக் கொண்டுவரும்.
ஒவ்வொருவரும் தங்கள் எழுத்தைப் பிழையின்றி எழுத முயல்வதுதான் சரி. அதற்கு வாய்ப்பு அல்லது அதற்கேற்ற திறமை இல்லாதபோது, உரிய திறமையாளர்களுடைய சேவையைப் பயன்படுத்திக்கொண்டு திருத்தி வெளியிடவேண்டும். நம் எழுத்து பிழையின்றி இருப்பதுதான் நமக்குப் பெருமை என்ற உணர்வு வரவேண்டும்.
***
நம் “எழுதுவோம்” தளமும் தேவையுள்ள எழுத்தாளர்களுக்குத் தொழில்முறை எடிட்டிங் சேவையை வழங்குகிறது. உங்கள் நூல்களை பிழையின்றி எடிட்டிங் செய்து தர, எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்: ezhudhuvom@gmail.com
***
தொடர்புடைய நூல்கள்:
***
Keywords: Tamil, Thamizh, Tamizh, Thamil, Ilakkanam, இலக்கணம், பிழை, பிழையின்றி, பிழையின்றி எழுதுதல், பிழை திருத்தல், பிழைத் திருத்தல், பிழை திருத்தம், பிழைத் திருத்தம், பிழைத்திருத்தம், பிழைதிருத்தம், பிழைதிருத்தல், பிழைத்திருத்தல், நல்ல தமிழ், நல்ல தமிழ் எழுதுவோம், எடிட்டிங், எடிட், எடிட்டர், Editing, Editor, Professional Editing, Freelance Editing, Freelance Editor, Freelance Editors, Editors