உலகின் மிகச் சிறந்த முதலீட்டாளர்களில் ஒருவர், நிதி, தொழில் சார்ந்த சிந்தனையாளர் வாரன் பஃபெட். அவரைப் பார்த்து முதலீட்டுத் துறைக்குள் வந்தவர்கள், வந்துகொண்டிருப்பவர்கள் ஏராளம்.
அது சரி, ‘எழுதுவோம்’ தளத்தில் அவர் ஏன் வருகிறார் என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாகத் தன்னுடைய பங்குதாரர்களுக்குச் சிறப்பான கடிதங்களை எழுதிவருகிறார் வாரன் பஃபெட். அவற்றை எல்லாவிதமான மக்களும் படித்துப் பயன் பெறுகிறார்கள். அப்படியானால், எழுத்தாளர்களாகிய நாமும் அவரிடம் கற்றுக்கொள்ள ஓரிரு விஷயங்கள் இருக்குமில்லையா?
‘நான் எழுதும்போது வாசகருடைய பார்வையில் என்னை வைத்துக்கொள்வேன்’ என்கிறார் வாரன் பஃபெட். அதாவது, அவர் வாசகராக இருந்தால் அந்தக் கடிதத்தில் அல்லது கட்டுரையில் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார் என்பதை முதலில் சிந்திக்கிறார், பிறகு, அவை அனைத்தையும் அழகாகத் தொகுத்து எழுதிவிடுகிறார், மக்களும் அதைக் கொண்டாடிப் படிக்கிறார்கள்.
எளிய வழிமுறைதான், ஆனால், பின்பற்றக் கடினமானது, பின்பற்றினால் மிகப் பெரிய வெற்றியைத் தரக்கூடியது: வாசகருடைய பார்வையில் இருந்து எழுதுதல், வாசகரைப் புரிந்துகொள்ளுதல், அவர் எதிர்பார்க்கிறவற்றை நம் படைப்பில் வழங்குதல். இவை அனைத்தையும் வாரன் பஃபெட்டிடம் கற்றுக்கொள்வோம்.
வாரன் பஃபெட் எழுதிய புகழ் பெற்ற பங்குதாரர் கடிதங்களின் தொகுப்பு நூலைப் படிக்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்
***
Keywords: Warren Buffett, Berkshire Hathaway, Investor, Writer, Writers, Authors, Author, Writing, Investment, Advice, Reader, Reader Perspective