சங்கமம் என்ற இணையத் தளம் நாவல்களுக்கான போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. குடும்பம், காதல், சமூகம், ஆன்மிகம், வரலாறு, அறிவியல், த்ரில்லர் உள்ளிட்ட பல வகை நாவல்கள் இதில் பங்கேற்கலாம். ஒருவர் பல கதைகளைக்கூட எழுதலாம்.
சிறந்த நாவல்கள் மூன்று பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறந்த மூன்று நாவல்களுக்குத் தலா ரூ 10,000 பரிசு வழங்கப்படுகிறது, இரண்டாம் பரிசு மூன்று நாவல்களுக்குத் தலா ரூ 5000, மூன்றாம் பரிசு ஒன்பது நாவல்களுக்குத் தலா ரூ 2,000. இத்துடன் ஒரு நாவலுக்குச் சிறப்புப் பரிசும் வழங்கப்படவுள்ளது.
போட்டியில் கலந்துகொள்ளும் நாவல்கள் 40000 முதல் 50000 சொற்கள்வரை இருக்கவேண்டும். அத்துடன், டிசம்பர் 31க்குள் உங்கள் நாவல்களைச் சமர்ப்பிக்கவேண்டும்.
இந்தப் போட்டி பற்றிய கூடுதல் தகவல்களைக் காண, இங்கு க்ளிக் செய்யுங்கள். கலந்துகொள்ளுங்கள், வெற்றிக்கு வாழ்த்துகள்.
பின்குறிப்பு: போட்டிக்காகக் குறிப்பிட்ட சொல் எண்ணிக்கையில் உங்கள் படைப்பை நிறைவுசெய்வதுபற்றிக் குழப்பம் உள்ளதா? எங்களுடைய இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.
பொறுப்பு துறப்பு: எங்களுக்குக் கிடைத்த போட்டி அறிவிப்பை உங்கள் வசதிக்காக இங்கு வெளியிட்டுள்ளோம். இதுபற்றிய கூடுதல் தகவல்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள இணைய முகவரியை அணுகுங்கள். இது தொடர்பான உங்கள் நடவடிக்கைகளுக்கு, அவற்றின் விளைவுகளுக்கு “எழுதுவோம்” தளம் பொறுப்பேற்காது.
***
Keywords: Novel competition, Novel prize, Prizes, Prize, Novels, Novel, நாவல், நாவல்கள், பரிசு, பரிசுப் போட்டி, பரிசுப்போட்டி