ஆண்டுதோறும் “கருமாண்டி ஜங்ஷன்” யூட்யூப் சானல் நடத்தவுள்ள விமர்சகர் வெங்கட்சாமிநாதன் நினைவுச் சிறுகதைப் போட்டியின் இந்த ஆண்டுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த கதைகளுக்கு முதல் பரிசு ரூ 5,000, இரண்டாம் பரிசு ரூ 3,000, மூன்றாம் பரிசு ரூ 2,000, ஆறுதல் பரிசு 10 கதைகளுக்குத் தலா ரூ 1,000 என ரூ 20,000 பரிசு வழங்கப்படுகிறது.
உங்களுக்குப் பிடித்த கதைகளை எழுதி அனுப்புங்கள், அவை எந்தத் தலைப்பிலும் இருக்கலாம், ஆனால், இதுவரை வெளிவராத சொந்தக் கற்பனையாக இருக்கவேண்டும். வேர்ட் வடிவத்தில் லதா ஃபான்ட்டில் 2400 சொற்களுக்குள் இருக்கவேண்டும். கதையுடன் ஓர் உறுதிமொழிக் கடிதத்தையும் இணைக்கவேண்டும், அதில் இந்தக் கதை உங்கள் சொந்தக் கற்பனைதான் என்றும், இந்தப் போட்டியின் முடிவு வரும்வரை இதை வேறு எந்த ஊடகத்துக்கும் அனுப்பமாட்டீர்கள் என்றும் உறுதியளிக்கவேண்டும்.
கதைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள்: அக்டோபர் 15
கதைகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: karumaandijunction@gmail.com
அனைவரும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளுங்கள், வெற்றி பெறுங்கள், அட்வான்ஸ் வாழ்த்துகள்!
பொறுப்பு துறப்பு: எங்களுக்குக் கிடைத்த போட்டி அறிவிப்பை உங்கள் வசதிக்காக இங்கு வெளியிட்டுள்ளோம். இதுபற்றிய கூடுதல் தகவல்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை அணுகுங்கள். இது தொடர்பான உங்கள் நடவடிக்கைகளுக்கு, அவற்றின் விளைவுகளுக்கு “எழுதுவோம்” தளம் பொறுப்பேற்காது.
***
Keywords: Short story competition, shortstory competition, short story prize, shortstory prize, Prizes, Prize, Short Stories, Shortstories, Short Story, Short Story, சிறுகதை, சிறுகதைகள், சிறு கதை, சிறு கதைகள், பரிசு, பரிசுப் போட்டி, பரிசுப்போட்டி